அதிகப்படியான சத்து நிறைந்துள்ள சாம்பாரை சில நிமிடங்களில் செய்யலாம்.
எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். அதிகப்படியான புரோட்டீன் நிறைந்துள்ள இந்த சாம்பாரை எப்படி சுவையாகச் செய்வது என்பதைப் பார்ப்போம்
தேவைப்படும் பொருட்கள்:
துவரம் பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 1
சின்ன வெங்காயம் – 5
தக்காளி – 2
பூண்டு – 4 பற்கள்
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
முருங்கைக்காய் , கத்தரிக்காய் மற்றும் உங்களுக்கு விருப்பமுள்ள காய்கறிகள்
செய்முறை
துவரம் பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவையுங்கள்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு, காய்கறிகளைச் சேர்த்து வதக்கிய
இந்த கலவையில் இப்போது 2 கப் தண்ணீர் மற்றும் தக்காளியைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பருப்பு வேகவைத்த பிறகு, அதனை ஓரளவு மசித்து, அதில் சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு அதனோடு வதக்கிய காய்கறி கலவையை சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீரையும் சேர்த்து உப்பு காரம் சரியாக உள்ளதா என பார்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லியைத் இலையை தூவி, இறக்கவும் . சுவையான சூடான சாம்பார் ரெடி.